அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
————————-
அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –
2-3-1-வியத₃தி₄கரணம்-ப்ரஹ்மம் தவிர அனைத்தும் படைக்கப் படுவதே–
பாதத்தின் ஸங்கதி
முதல் அத்யாயத்தில் “-அகில ஜகத் ஏக காரணம்-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவு எட்டப்பட்டது. இரண்டாவது அத்யாயத்தில் அந்த முடிவை எதிர்த்து எழக் கூடிய ஆஷேபங்களுக்கெல்லாம் வேத வ்யாசர் பதில் கூறுகிறார்.-உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. “ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்பது ஒரு பகுதி, “உலகம் அனைத்துக்கும் காரணம்” என்பது இரண்டாவது பகுதி.-அதில் முதல் பகுதியைத் தாக்குவதற்காக ப்ரஹ்மம் காரணமாக இருக்க முடியாது என்று பலரும் செய்த ஆஷேபங்கள் அனைத்துக்கும் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் வேத வியாசர் பதிலுரைத்தார். அதற்கு மேல் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் உலகத்துக்கு காரணமாக மற்ற பொருள்கள் சொல்லப் படுகின்றனவே , அவை எதுவும் ஜகத் காரணமாக இருக்க முடியாது. அந்த மதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை வேத வியாசர் நிரூபித்தார். ஆக இரண்டு பாதங்களால் “ப்ரஹ்மம் ஒரே காரணம்” என்பது நிலை நாட்டப்பட்டது.
இனி அடுத்த இரண்டு பாதங்களில் நாம் எடுத்த முடிவின் இரண்டாவது பகுதியான “உலக அனைத்துக்கும் காரணம்” என்கிற பகுதியைத் தாக்குவதற்காக பல விதமான ஆஷேபங்களை மற்றவர்கள் எழுப்புகிறார்கள். ப்ரஹ்மம் ஒரு சில பொருட்களுக்குக் காரணமாக இருக்கட்டும், உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டதல்ல, என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பதில் சொல்லி “உலகம் அனைத்துக்கும் ப்ரஹ்மம் ஒன்றே காரணம்” என்கிற முடிவை மறுபடியும் நிலை நாட்டுகிறார் வேத வியாசர் அடுத்த இரண்டு பாதங்களால்.
இந்த அத்யாயத்தின் முதல் பாதத்துக்கு ஸ்ம்ருதி பாதம் என்று பெயர்,ஸ்ம்ருதிகளைக் கொண்டு பூர்வ பக்ஷிகள் ஆஷேபங்களை எழுப்பிய படியால். இரண்டாவது பதத்துக்கு தர்க்க பாதம் என்று பேயர், தர்க்கத்தின் அடிப்படையில், அதாவது யுக்திகளைக் கொண்டு மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை என்று வியாசர் நிரூபித்த படியால். இந்த மூன்றாவது பதத்துக்கு வியத் பாதம் என்று பெயர். வியத் என்றால் ஆகாசம். ஆகாசம் முதலான பொருள்களும் கூட ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகின்றன என்று இதில் நிரூபிக்கிற படியால். அடுத்தது நான்காவது பதத்துக்கு ப்ராண பாதம் என்று பெயர், ப்ராணன், இந்திரியங்கள் முதலானவையும் பகவானால் தான் படைக்கப் படுகின்றன என்று அந்த பாதத்தில் நிரூபிக்கப் போகிறார். இது தான் இந்த பாதத்திற்கும் முன் பின் பாதங்களுடன் இருக்கும் ஸங்கதியாகும்.
ஆகாசம் உண்டாக முடியுமா?
2-3-1-வியத₃தி₄கரணம் – பூர்வ பக்ஷம் – ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை , அது நித்யமானது என்கிறார் பூர்வ பக்ஷீ
1-ந வியத் அஸ்ருதத: – “ஆகாசம் உண்டாவதில்லை , அப்படிச் சொல்லும் ஸ்ருதி இல்லாதபடியால்”
பூர்வ பக்ஷி சொல்வது – உலகத்தில் நாம் புலன்களால் அறிந்ததோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது. வேதமே கூட “நெருப்பு குளிர்ந்தது” என்று சொன்னால், அதை அப்படியே ஏற்க முடியாது, புலன்களால் ’நெருப்பு சூடானது’ என்று நாம் அறிந்திருக்கிற படியால். எனவே , அச் சொல் தொடருக்கு வேறு மாதிரி தான் பொருள் கொள்ள வேண்டும்.
அதே போல், ஆகாசம் உண்டாவது என்பது நடக்க முடியாத ஒன்று. எனவே , வேதத்தால் கூட “ஆகாசம் உண்டாக்கப் படுகிறது” என்று போதிக்க முடியாது.
ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள்
(1) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளோடு கூடியவை தான். ஆனால் ஆகாசத்துக்குப் பகுதிகள் இல்லை . எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாதது
(2) உலகில் உண்டாக்கப்படும் பொருள்கள் அனைத்துமே நடுத்தர அளவோடு (பரிமாணத்தோடு) தான் இருக்கும்.-ஆனால் ஆகாசமோ எல்லா இடத்திலும் பரந்துள்ளது. எனவே ஆகாசம் உண்டாக்கப் படமுடியாது.
மேலும், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கும் முறையை வருணிக்கும் போது “(ததை ₃ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி, தத்வதஜ: அஸ்ருஜத) அதாவது ’அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்தது – “நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன்” என்று. (ஈஷத் அதிகரணம் -1-1-5 முன்பே பார்த்துள்ளோம்-நெருப்பு ஜலம் பிருத்வி மூன்றும் இங்கு சொல்லப்பட்டுள்ளது -ஆகாசம் வாயு இவை பற்றி சொல்லப் பட வில்லை இங்கு -)அந்த ப்ரஹ்மம் தேஜஸ் என்ற நெருப்பைப் படைத்தது’ எனப்படுகிறது. எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது முதன் முதலில் ஐம்பூதங்களுக்குள் தேஜஸ் தான் உண்டாக்கப் படுகிறது என்று கூறி, அதற்குப் பிறகும் ஜலம் பூமி ஆகியவற்றின் ஸ்ருஷ்டி மட்டும் தான் சொல்லப்படுகிற படியால் ஆகாசம் உண்டாக்கப் படுவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆக இவ்வாறு ஆகாசம் ப்ரஹ்மத்தால் படைக்கப் படாதபடியால் “உலகமனைத்தும் ப்ரஹ்மம் காரணம்” என்று நீங்கள் சொல்வது தவறானது என்று வாதிடுகிறார் பூர்வ பஷி
ஆகாசமும் உண்டாக்கப்படுவதே
ஸித்தாந்தம் – 2-அஸ்தி து – “ (ஆகாசம் உண்டாவதைச் சொல்லும் வேத வாக்யம்) இருக்கிறது அ்ன்றோ ”
தைத்திரீய உபநிஷத்தில் (ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த: ) அதாவது “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று ஸ்பஷ்டமாக ஆகாசத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுவதால் ஆகாசமும் படைக்கப்படுவதே .(ஆனந்தாதி அதிகரணம் -முன்பே இது பற்றி பார்த்துள்ளோம்)
புலன்களால் அறியப்பட்ட விஷயங்களோடு முரண்பட்ட ஒரு விஷயத்தை வேதமாகவே இருந்தாலும் போதிக்க முடியாது என்று நீங்கள் சொன்னதை ஏற்கிறோம். ஆனால் வேதத்துக்கு ஒரு சிறப்பு உள்ளது, புலன்களோடு முரண் படாமல் ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வேதத்தால் போதிக்க முடியும். இவ் விடத்திலும் ஆகாசத்தின் உத்பத்தி என்பது நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஸ்ருஷ்டி உண்டு என்று வேதம் சொல்லும் போது அது புலன்களுக்கு முரண் பட்டதே அல்ல. “ஆகாசம் உண்டாவதில்லை ” என்று நாம் புலன்களால் அறிந்தது கிடையாது. “ஆகாசம் உண்டாகிறது” என்று தெரிந்து கொண்டதில்லை , அவ்வளவே . ஆகையால் புலன்களுக்கு முரண் படாமல், ஆனால் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆகாசத்தின் உத்பத்தியை வேதம் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை
மேலும் பகுதிகள் இல்லாத்படியால் ஆகாசம் உண்டாக்கப் படவே முடியாது என்று சொல்லியிருந்தீர்கள். அதுவும் தவறானது. ஏன் என்றால் ஆகாசத்துக்கு பகுதிகள் கண்டிப்பாக உள்ளன. வேதத்திலும் புராணங்களிலும் த்ரிவித் கரணம் என்றும்
பஞ்சீகரணம் என்ற ஒரு செயல் சொல்லப்படுகிறது. ஐம் பூதங்களையும் படைத்த பிறகு பரமாத்மா இந்த ஐந்து பூதங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறாராம். கலந்த பிறகு பார்த்தோ மென்றால் ஆகாசம் என்பதில் 50% ஆகாசமும் தலா 12.5% நிலம், நீர், தீ, காற்று ஆகிய மற்ற நான்கு பூதங்களும் உள்ளன என்று சாஸ்த்ரம் கூறுகிறது. ஆகாசத்திற்கு பகுதிகளே இல்லை என்றால் எப்படி இப்படி பிரித்து கலக்க முடியும்? அதனால் பகுதிகளில்லை என்று நீங்கள் சொல்வதும் தவறானது.
ஆகவே , இந்த வேத வாக்கியம் ஆகாசத்தின் உண்டாக்கத்தைச் சொல்லுகிறபடியால் ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.
பூர்வ பக்ஷியின் கேள்வி
3-கௌ₃ணீ அஸம்ப₄வாத் சப்₃தா₃த் ச – “இரண்டாம் பக்ஷம், முடியாத படியாலும் சொல்லாலும்”
இங்கு பூர்வபக்ஷீ ஆஷேபம் செய்கிறார் –கௌ₃ணீ- “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” என்ற வாக்கியத்தில் உள்ள ’ஸம்பூ₄த:’(உண்டானது) என்ற சொல்லுக்கு நேரடியாக உண்டாக்கம் என்ற பொருள் கொள்ள முடியாது. இரண்டாம் பஷமாக-கௌணமாக) தோற்றம் -வெளிப்பாடு என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீரனை ’இவன் சிங்கம்’ என்று சொல்வது எப்படி Figurative (உருவகம்) என்று சொல்லப்படுகிறதோ அது போல் இங்கும் முதன்மையான பொருளல்ல.
அஸம்ப₄வாத் – முடியாத படியால் – தேஜஸ்ஸே முதலில் தோன்றுகிறது என்று வேதம் சொல்வதால் ஆகாசம் உண்டாக்கப்பட முடியாதபடியால்
சப்₃தா₃த் ச – சொல்லாலும் – வேதத்திலேயே (्வாயு: ச அந்தரிஷம் ச ஏதத் அம்ருதம்) அதாவது
’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று சொல்கிற படியாலும் ஆகாசத்துக்கு உண்டாக்கம் கிடையாது.
4-ஸ்யாத் ् ச ஏகஸ்ய ப்₃ரஹ்ம சப்₃த₃வத் – “ஒ்ன்றுக்கு இருக்கலாம், ப்ரஹ்மம் என்ற சொல் போல்”
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த ஸூத்ரத்தில் பூர்வ பஷி கூறுகிறார்.
கேள்வி – “பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டானது” என்று சொன்ன பிறகு “வாயுவிலிருந்து நெருப்பு”,“நெருப்பிலிருந்து ஜலம்” முதலான வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்யத்தில் இருக்கும் ’உண்டானது’ (ஸம்பூ₄த: ) என்ற சொல்லை பின் வாக்கியங்களிலும் சேர்க்க வேண்டும்.இதை அனு க்ஷங்கம் என்பர் – அப்போது, முதல் வாக்கியத்தில் ஆகாசம் உண்டாக முடியாததால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’வெளிப்படுகிறது’ என்று பொருள் கொண்டு விட்டு, பின்னால் உள்ள வாக்கியங்களில் தேஜஸ் முதலானவை உண்மை யாகவே உண்டாகிற படியால் ’உண்டாகிறது’ என்ற சொல்லுக்கு ’உண்டாக்கம்’ என்ற பொருளை எப்படிக் கொள்ள முடியும்?-பதில் – ஒரே சொல்லுக்கு வேறு இடங்களில் வேறு பொருள்கள் இருக்கலாம். உபநிஷத்தில் ஒரே இடத்தில் ஒரு முறை ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு மூல ப்ரக்ருதி என்றும் இரண்டாம் முறை பரமாத்மா என்று பொருள் கொள்வது போல்.
வ்யாஸரின் பதில்
5-ப்ரதிஜ்ஞ அஹாநி அவ்யதிரேகாத் – “ப்ரதிஜ்ஜைக்கு பாதிப்பில்லாமை வேறல்லாத படியால்”
பூர்வ பக்ஷியின் வாதத்துக்கு இந்த ஸூத்ரத்தில் வேத வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில் முதலில் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப்படுவதைக் கொண்டு ’ஸம்பூ₄த:’ என்ற சொல்லுக்கு இரண்டாம் பஷமாகப் பொருள் கொள்ள இயலாது-சாந்தோக்யத்திலேயே ஆகாசத்தின் உத்பத்தி சொல்லப் பட்டுள்ள படியால் என்கிறார் வேத வ்யாஸர்.
சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத்₃வித்யையில் தான் தேஜஸ்ஸின் உண்டாக்கம் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த ப்ரகரணத்தின் தோடக்கத்திலேயே உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேத கேது என்ற மகனைப் பார்த்து “எந்த ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டாயா?” என்று வினவுகிறார். இதில் ஒரு ப்ரதிஜ்ஜை (அறிவிப்பு) உள்ளது – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று. அந்த ப்ரதிஜ்ஜை உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு அஹாநி(பாதிப்பில்லாமை ) இருக்க வேண்டும் என்றால், ஆகாசமும் உண்டாக்கப் படுவது தான் என்று ஏற்கத் தான் வேண்டும்.
இவ் விடத்தில் உத்தாலகர் சொல்வது – ’உலகத்தில் ஒரு காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்கள் அனைத்தையும் அறிந்ததாகும். எடுத்துக் காட்டுக்கு, ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகும் குடம், தட்டு, சுவர் முதலான அனைத்தையுமே நாம் ஒரு விதத்தில் ’மண்’ என்ற அளவிற்கு அறிந்ததாகத் தான் ஆகும். ஏனெனில் குடம் என்பது மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல. அது போல் தான் இங்கும் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். அதாவது, உலகில் அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதால், ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு பொருளல்ல. ஆகையால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்கிறார். இது உண்மையாக இருக்க வேண்டுமென்றால் ஆகாசமும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யிருக்கத் தான் வேண்டும். இல்லா விட்டால், ப்ரஹ்மத்தை அறிந்தாலும் ஆகாசத்தை அறிந்ததாக ஆகாதபடியால் உத்தாலகர் ’அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று சொன்னது பொய்யாகி விடும். எனவே சாந்தோக்யமே ஆகாசத்தின் உத்பத்தியைக் கூறுகிறது.
மேலும் சில யுக்திகள்
6–சப்₃தே₃ப்₄ய: – “(ஆகாசம் உண்டாவதை மற்ற சில வாக்கியங்களிலிருந்து அறியலாம்”
ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்” –-ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகனைத்தும் ஸத் என்ற ஒரே பொருளாக இருந்தது, வேறு எதுவுமில்லை –இவ்வாறு வேதம் சொல்வதால், ப்ரளயத்தின் போது ஸத் என்ற பரமாத்மா மட்டுமே இருந்தார் என்று தெரிகிற படியால், அப்போது ஆகாசமும் இல்லை , பிற்பாடு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாயிற்று என்று தெரிகிறது.
(ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-)
“ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்” – இது அனைத்தும் ப்ரஹ்மமே -குடம் தட்டு சுவர் முதலான பொருள்கள் எல்லாம் மண்ணிலிருந்து உண்டான படியால் ’இவை அனைத்தும் மண் தான்’ என்று சொல்வது போல் இங்கு வேதம் ’இவ் வுலகில் அனைத்துமே ப்ரஹ்மம் தான்’ என்று கூறுவதால், உலகில் ஒரு பகுதியான ஆகாசமும் ப்ரஹ்மத்திட மிருந்து தோன்றியது தான் என்று தெளிவாகிறது.
7– யாவத் ₃விகாரம் து விபா₄க₃: ஸ்யாத் லோகவத்
விகாரம் என்றால் காரியப் பொருள். விபா₄க₃ம் என்றால் உண்டாக்கம். ஆகாசம் முதலானவை காரியப் பொருள்கள் தான் என்று சொல்வதாலேயே அவை ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்பது சொன்னதாகிறது
லோகவத் – உலகத்தில் போல் – உலகத்தில் ’இவர்கள் அனைவரும் தேவ தத்தனின் புதல்வர்கள்’ என்று சொல்லி விட்டு, ஒரு சிலர் அவனிடமிருந்து பிறந்தது விளக்கப் பட்டால், அனைவரும் அவனிடமிருந்து பிறந்தது சொல்லப்பட்டதாகும். -அது போல், ’உலகில் அனைத்தும் ப்ரஹ்மத்தின் காரியங்கள்’ என்று சொல்லி விட்டு, தேஜஸ் ஜலம் பூமி என்பவை உண்டாகும் முறையை வேதம் காட்டினால், அது மற்றவை உண்டாக வில்லை என்ற பொருளைத் தராது, அவை அனைத்தும் அதே போல் தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி யுள்ளன என்பதையே குறிக்கும்-’வாயுவும் ஆகாசமும் நித்யமானவை ’ என்று வேதம் சொல்வது, முற்றிலுமாக உண்டாக்கமும் அழிவும் இல்லாததால் அல்ல, மற்ற பொருள்களை விட நீண்ட காலத்துக்கு இவை இரண்டும் அழியாமல் இருப்பதால் மட்டுமே –
அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது
8–ஏதேந மாதரிச்வா வ்யாக்₂யத: – “இத்தால் வாயு (உண்டாகக் கூடியதாக) விளக்கப் பட்டது”
இப்படி ஆகாசம் உண்டாகக் கூடியது தான் என்பதற்குச் சொன்ன யுக்திகளாலேயே வாயுவும் உண்டாகக் கூடியது தான் என்பது நிரூபமாகிறது.-இதை முன் ஸூத்ரத்திலேயே சேர்க்காமல், தனி ஸூத்ரமாக வ்யாஸர் வைத்தது, அடுத்த அதிகரணத்தில் வாயுவை மட்டும் நினைவு கூறுவதற்காக. இது அடுத்த அதிகரணத்தில் தெளிவாகும்
9-அஸம்ப₄வஸ்து ஸத: அநுபபத்தே : –
(உண்டாக) முடியாமை ஸத் என்கிற பரமாத்மாவுக்கே , (மற்ற பொருள்களுக்கு உண்டாகாமை ) பொருந்தாத படியால்-இவ் வதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாகக் கூடியவை என்று சொன்னதோடு நிற்காமல், உலகில் அனைத்துமே உண்டாகக் கூடியது தான் என்று நிரூபிக்கிறார் இந்த ஸூத்ரத்தால். உலகில் உண்டாகாமை என்ற பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும், மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது. ஏன் என்றால், முன்னமே சொன்னபடி, சா₂ந்தோக்₃ய உபநிஷத்தின் 6ஆம் ப்ரபாடகத்தில் உள்ள ஸத் வித்யை என்ற பகுதியில் உத்தாலகர் என்ற தகப்பனார் ஸ்வேதகேது என்ற மகனிடம் ’ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்கிறார். இது உண்மையாக வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி தான் உள்ளது –உலகப் பொருள்களும் ப்ரஹ்மமும் ஒரே போருளாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தான் உள்ளது – உலகப் பொருள்கள் அனைத்தும் ப்ரஹ்டமிருந்து உண்டாகி யிருக்க வேண்டும். ஆகையால், எந்தப் பொருளுமே உண்டாகாததாக
இருக்கவே முடியாது.
ஆக, இவ்வதிகரணத்தால், தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் பரமாத்மாவான ப்ரஹ்மம் காரணமாக உள்ளது என்று நிரூபிக்கப் பட்டது. எனவே , முதல் அத்யாயத்தில் நாம் எட்டிய முடிவு சரியானதே என்று நிலை நாட்டப்படுகிறது.
2-3-2-தேஜோதி₄கரணம்-அனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்தே உண்டாகிறது–பூர்வ பக்ஷியின் வாதம்- – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஆகாசமும் வாயுவும் உண்டாக்கப் படுகின்றன எனப்பட்டது.-அதற்கடுத்து உண்டாகக் கூடிய தேஜஸ், ஜலம், ப்ருதிவீ ஆகியவற்றைப் பற்றின ஆராய்ச்சி இங்கு செய்யப்படுகிறது
முன் அதிகரணத்தில் உலகப் பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் பட்டது. மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம், மஹான், அஹங்காரம், புலன்கள், தன்மாத்ரங்கள், ஐம் பூதங்கள் என்பவை அனைத்தும் உண்டாகின்றன என்று வேதம் கூறுகிறது. அதில் ஒரு கேள்வி எழுகிறது – இவை ஒவ்வொன்றுமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றனவா? அல்லது ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதியிலிருந்து அவ்யக்தம் என்பதை மட்டும் உண்டாக்கும், அதற்குப் பின் அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த அசேதனப் பொருள்களை உண்டாக்குகின்றனவா? என்று.
பூர்வ பக்ஷம் – அந்தந்த அசேதனப் பொருள்களே அடுத்தடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
1-தேஜ : அத: ததா ₂ஹிஆஹ
அத: – அதிலிருந்து -முன் அதிகரணத்தின் 8ஆம் ஸூத்ரத்தில் சொல்லப்பட்ட மாதரிச்வா எனும் வாயுவிடமிருந்து
தேஜ : – தேஜஸ் என்ற நெருப்பு உண்டாகிறது
ததா₂ஹிஆஹ– அவ்வாறு அன்றோ (வேதம்) சொல்கிறது
தைத்திரீய உபநிஷத்தில் ஆத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று, ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று என்று சொன்ன பிறகு, (வாயோர் : அக்₃நி: ) அதாவது வாயுவிலிருந்து நெருப்பு உண்டாகிறது என்று தான் கூறப்பட்டுள்ளது. எனவே அசேதனப் பொருளே அடுத்த அசேதனப் பொருளை உண்டாக்குகிறது, ப்ரஹ்மம் அல்ல.
2-ஆப: – “(அதிலிருந்து அதாவது தேஜஸ்ஸிலிருந்து) ஜலம் (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அக்₃நே : ஆப: ) அதாவது “அக்₃நியிலிருந்து ஜலம் உண்டானது” என்றும், சாந்தோக்யத்தில்(தத் அப: அஸ்ருஜத) அதாவது “அந்த தேஜஸ் ஜலத்தைப் படைத்தது” என்றும் தான் சொல்லப்படுகிறது.
பூர்வபக்ஷியின் வாதம் தொடர்கிறது
3-ப்ருதி₂வீ – (அதிலிருந்து அதாவது ஜலத்திலிருந்து) ப்ருதி₂வீ (உண்டாகிறது, அவ்வாறு அன்றோ சொல்கிறது)”
தைத்திரீயத்தில் (அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ ) அதாவது “ ஜலத்திலிருந்து ப்ருதிவீ உண்டானது” என்றும்,
சாந்தோக்யத்தில் (தா: அந்நம் அஸ்ருஜந்த) அதாவது “அந்த ஜலம் அந்நத்தைப் படைத்தது” என்று தான் சொல்லப்படுகிறது. எனவே அந்தந்த அசேதனப் பொருளே அடுத்த காரியத்தை உண்டாக்கி விடுகிறது.
4–அதி₄கார-ரூப- சப்₃தா₃ந்தரேப்₄ய: – அந்நம் எனப்படுவது ப்ருதி₂வீ தான் என்று நிரூபிக்கிறார்
அதி₄காரம் – இந்த ப்ரகரணத்தில் (வேதப் பகுதியில்) ஆகாசம் வாயு முதலான பூதங்களின் உண்டாக்கமே பேசப்படுகிற படியால் இங்கும் அந்நம் என்பது உணவல்ல, உணவுக்கெல்லாம் காரணமாக இருக்கும் ப்ருதிவீ தான்
ரூபம் – இதே வேதப் பகுதியில் “நெருப்பில் இருக்கும் சிவப்பு, வெண்மை மற்றும் கருமை ஆகிய வண்ணங்கள் தேஜஸ், ஜலம் மற்றும் அந்நத்திலிருந்து வந்தவை ” என்று கூறப் படுகிறது. இப்படி தேஜஸ்ஸுக்கும் ஜலத்துக்கும் ஸமமாகச் சொல்லப்படுவதால், அந்நம் என்பதும் ஐம் பூதங்களில் ஒன்றான ப்ருதிவியாகத் தான் இருக்க வேண்டும்.
சப்₃தா₃ந்தரம் – சாந்தோக்ய உபநிஷத்தில் அந்நம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டாலும் இதே போன்ற இடத்தில் தைத்திரீயத்தில் ப்ருதிவீ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நம் என்பது ப்ருதிவீ தான்.எனவே அந்நம் என்பது ப்ருதி₂வியே . ஆக, தேஜஸ் முதலான அசேதனங்களே அடுத்த பொருள்களை உண்டாக்குகின்றன
கேள்வி – வேதத்தில் ஓரிடத்தில் எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாவதாகச் சொல்லப்படுகிறதே ?-ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண: மந: ஸர்வேந்த்₃ரியாணி | க₂ம் வாயு: ஜ்யோதி: ஆப: ப்ருதி₂வீ விச்வவஸ்ய தா₄ரிணீ || ப்ரஹ்மத்திடமிருந்து ப்ராணன், மனது, புலன்கள், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதி₂வீ ஆகியவை உண்டாகின்றன –
பதில் – இவை யெல்லாம் நேரடியாக ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகின்றன என்று வேதம் சொல்லவில்லை , அடுத் தடுத்து வரிசையாக இவை உண்டாகிற படியால், பரம்பரையாக எல்லாம் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானது என்றே சொல்கிறது–
ஸித்தாந்தியின் பதில்-ஸித்தாந்தம் –5–த₃பி₄த்₄யாநாத் ஏவ து தல்லிங்காத் ஸ:
ஸ: து – (மஹான் முதலானவைக்கு காரணம்) அவரே = அவ்யக்தம் முதலானவற்றை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே –
த₃பி₄த்₄யாநாத் ஏவ தல் லிங்காத் – அபி₄த்₄யாநம் (ஸங்கல்பம்) என்கிற தனிப்பட்ட லிங்கத்தால் (அடையாளத்தால்) தேஜஸ், ஜலம் முதலானவை அடுத்தடுத்த பொருளைப் படைப்பதற்கு முன் ஸங்கல்பம் (எண்ணம்) செய்கின்றன என்று வேதம் சொல்கிறது – தத் தேஜ ஐக்ஷத” தா ஆப ஐக்ஷந்த” என்று. அசேதனப் பொருள்களுக்கு இது பொருந்தாது, எனவே அந்தந்த அசேதநப் பொருளே சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் அடுத்தடுத்த பொருளை உண்டாக்குகிறார் என்பதே பொருத்தமானது. பரமாத்மா அனைத்துக்கும் அந்தர்யாமியே –
(ஏ தஸ்மாத் ஜாயதே பிராணன் மனஸ் ஸர்வேந்த்ரியாணி கம் வாயு ஜ்யோதி ஆபோ பிருத்வீ -அனைத்துமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது -என்றும் வேத வாக்கியம் உள்ளது)
6–விபர்யயேண து க்ரம: அத: உபபத்₃யதே ச –”மாறுபட்ட வரிசை இத்தால் பொருந்துகிறது”
விபர்யயேண து – (அவ்யக்தம் மஹான் அஹங்காரம் என்கிற ஸ்ருஷ்டி வரிசையிலிருந்து) மாறுபட்ட
க்ரம: – (எல்லாமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறது என்று சொல்லப்பட்ட) க்ரமம் அதாவது வரிசை
அத: – இதனால் (அதாவது அனைத்துமே பரமாத்மா விடமிருந்தே உண்டாகிற படியால்)
உபபத்₃யதே ச – பொருந்துகிறது-
“ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வேத வாக்கியத்தில் பரமாத் மாவிடமிருந்து அவ்யக்தம், அதிலிருந்து மஹான்,-அதிலிருந்து அஹங்காரம், அதிலிருந்து ஐம் பூதங்கள் உண்டாகின்றன என்கிற வரிசையைச் சொல்லாமல் “எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது.
அதற்கு பூர்வ பஷி – எல்லாமே நேரடியாக பரமாத்மாவிமிருந்து உண்டாகா விட்டாலும், பரம்பரையாக உண்டாவதை இந்த வாக்கியம் சொல்கிறது என்றார்.
இப்போது ஸித்தாந்தத்தில் அந்தந்த அசேதனப் பொருள்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவிடமிருந்தே அனைத்தும் உண்டாகிற படியால், அனைத்துமே நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்வது கூடப் பொருத்தமானதே – அதனால் “ஏதஸ்மாத் ஜாயதே ப்ராண :” என்ற வாக்கியம் எங்கள் பக்ஷத்துக்கு ஸாதகமானது-
7-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேத் ந அவிசேஷாத்
பூர்வ பஷி கேள்வி கேட்கிறார் – இந்த வேத வாக்கியம் அனைத்தும் நேரடியாக பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று சொல்லவில்லை , ஒரு வரிசையில் தான் அடுத்தடுத்த பொருள்கள் உண்டாவதைச் சொல்கிறது என்று.
தல் லிங்காத் – (’ஆகாசம் வாயு தேஜஸ்’ என்ற வரிசையோடு சேர்த்துப் படிக்கப் படுதல் என்ற) அடையாளத்தால்
அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரமேண – ப்ராணனுக்கும் பூதங்களுக்கும் நடுவில் புலன்களும் மனதும் உண்டாகின்றன
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
அவிசேஷாத் – வேறுபாடில்லாத படியால்
’ஏதஸ்மாத் ஜாயதே ’ அதாவது ’பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறாது’ என்ற சொற்றொடர் ப்ராணனோடு மற்றும் சேரவில்லை , இங்கு சொல்லப்பட்ட அனைத்துப் பொருள்களோடும் சேர்கிறது. எனவே எல்லாமே பரமாத்மாவிடமிருந்து நேரடியாக உண்டகிறது என்று தான் கொள்ள வேண்டும்.
மேலும், இங்கு ஒரு குறிப்பிட்ட வரிசை சொல்லபடுகிறது என்று கூறுவது உங்கள் வேதத்திலும் பொருந்தாது. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் முதலில் ப்ராணன் உண்டாகிறது என்று கூறி, அதற்குப் பிறகு தான் ஆகாசத்திலிருந்து வாயு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. இது பொருந்தாது. ப்ராணன் (மூச்சுக் காற்று) என்பது வாயுவின் குறிப்பிட்ட வகையானபடியால் அது வாயுவுக்கு முன் உண்டாக முடியாது. எனவே இங்கு க்ரமம் (வரிசை ) சொல்லப்படவில்லை , எல்லாமே பரமாத்மாவிடமிருந்து உண்டாகிறது என்று தான் சொல்லப் படுகிறது.
ஆக இந்த அதிகரணத்தில் ’தேஜஸ்’’ஜலம்’ முதலான சொற்கெல்லாம் அந்தந்த அசேதனப் பொருளை மட்டும் குறிப்பிடவில்லை , அந்தந்த அசேதனப் பொருளை சரீரமாகக் கொண்ட பரமாமைவையே குறிக்கின்றன என்று கூறப்பட்டது. இதில் ஓர் ஆஷேபத்தை பூர்வபஷி எழுப்புகிறார் – எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்றால், உலகில் அனைவரும் தினமும் குடம் துணி மேஜை ஆடு மாடு முதலான பொருள்களைக் குறிக்க அந்தந்த சொற்களைப் பயன்படுத்துவது தவறாகி விடுமே ? பிறகு உலகப் பேச்சு வழக்கு என்பதே நின்று போய் விடுமே? என்று.-இதற்கு வேத வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் விடை அளிக்கிறார்.
8-சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேசோ பாக்த தத் பாவ பாவாத்
சராசர வ்யபாஸ்ர யஸ்து--அசையும் மற்றும் அசையாத உலகப் பொருள்களைப் பற்றி
தத்₃வ்யபதே₃ ச : – அந்தந்த சொற்களின் ப்ரயோகமானது (பயன்பாடானது)
பா₄க்த: ஸ்யாத் – உடைக்கப்பட்டதாக – இரண்டாம் பக்ஷமாக இருக்கும்
தத்₃பா₄வ பா₄வித்வாத் – அனைத்துச் சொற்களும் பரமாத்வையே சொல்கின்றன என்று தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே எல்லாச் சொற்களும் பரமாத்வையே போதிக்கிறபடியால்.
அதாவது, உலகத்தில் பொதுவாகக் காணப்படும் சொற்களின் பயன்பாடு தவறானது அல்ல, ஆனால் முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பரமாத்மா வரை போதிக்கும் சக்தி இருந்தாலும், அது தெரியாமல் மக்கள் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துவதால், அக் காலத்தில் குடம் துணி முதலான பொருள்களை மட்டும் அந்தந்தச் சொற்கள் குறிக்கின்றன. எப்போது வேதாந்தம் கற்று, ’எல்லாச் சொற்களும் பரமாத்வையே கூறுகின்றன’ என்று உணர்கிறார்களோ அப்போது அந்தந்தச் சொற்களின் முழுமையான சக்தியை உணர்ந்த படியால் அதற்குப் பின் அவர்களுக்கு அந்தந்தச் சொற்கள் பரமாத்மா வரை போதிக்கின்றன.
(அனைத்து சொற்களும் அவனைக் குறிக்கும் என்றும் அறிந்த பின்பு –புகழும் நல் ஒருவன் என்கோ –இத்யாதி–கண்ணனைக் கூவுமாறு அறியேன்–குன்றங்கள் அனைத்தும் என்கோ -ஆழ்வார் –)
ஆக, இந்த அதிகரணத்தில், அனைத்துப் பொருள்களும் ப்ரஹ்மத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று நிரூபித்தார்.
—
2-3-3-ஆத்மாதி₄கரணம்–ஜீவாத்மாவும் உண்டாக்கப்படுகிறாரா?—-ஸங்கதி – இந்த பாதத்தின் முதல் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர்ந்த மஹான், அஹங்காரம், ஆகாசம், வாயு முதலான அனைத்துப் பொருள்களுமே உண்டாக்கப் படுகின்றன என்று நிரூபிக்கப் பட்டது. அதற்கு மேல் இரண்டாவது அதிகரணத்தில் அவை அனைத்துமே பரமாத்மாவிடம் இருந்து தான் உண்டாகின்றன என்றும் சொல்லப்பட்டது. இப்படி அசேதன பொருள்களின் உண்டாக்கத்தைச் சொன்ன பிறகு சேதனனான ஜீவாத்மாவைப் பற்றி விசாரம் செய்யப்படுகிறது. ஜீவாத்மாவும் ஆகாசம் முதலானவற்றைப் போல் உண்டாக்கப் படுகிறாரா? இல்லையா? என்பது இந்த அதிகரணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி.
(இதில் ஸித்தாந்தம் ஸூத்ரம் ஒன்றே உள்ளது)
பூர்வ பக்ஷியின் வாதம்–ப்ரஹ்மத்தைத் தவிர அனைத்தும் உண்டாக்கப்படுகிறது என்று முன் அதிகரணங்களில் நிரூபித்ததால், ஜீவாத்மாவும் உண்டாக்கப் படுகிறார் என்று பூர்வபக்ஷி வாதிடுகிறார். இதற்கு இரண்டு யுக்திகளைக் கூறுகிறார் –
1-ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந பிரதிஜ்ஞா உபபத்தி – அதாவது சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்கிற பிரகரணத்தில் உத்தாலகர் என்கிற தந்தை ஸ்வேதகேது என்கிற மகனைப் பார்த்து, “எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகுமோ , அதை உன் ஆசார்யர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாயா?” என்று கேட்கிறார். அங்கு இருக்கும் பிரதிஜ்ஜை – “ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்பது. இது எப்படிப் பொருந்துமென்றால் – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு முதலானவற்றை அறிந்ததாகுமோ , அதே போல் உலகமே ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகிறபடியால் ப்ரஹ்மத்தை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறுகிறார். இந்த ப்ரதிஜ்ஜை பொருந்த வேண்டும் என்றால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகி யிருக்க வேண்டும். இல்லா விட்டால் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஆகாசம் முதலான அசேதனப் பொருள்களை மட்டுமே அறிந்ததாகுமே தவிர ஜீவாத்மாக்களை அறிந்ததாக ஆகாது. எனவே ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று சொல்வது பொய்யாகி விடும். அதனால் ஜீவாத்மாக்களும் ப்ரஹ்மத்திடம் இருந்து உண்டாகிறார்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
(2) ப்ராக் ஸ்ருஷ்டே : ஏகத்வ அவதாரணம் – “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ஒரே பொருளாகத் தான் இருந்தது” என்று வேதம் கூறுகிறது. இந்த வாக்கியம் சரியாக இருக்க வேண்டும் என்றால் ப்ரளய காலத்தில் ஆகாசம், வாயு முதலானவை எப்படி இல்லையோ , அதே போல் ஜீவாத்மாக்களும் தனித்து இல்லை . பரமாத்மா ஒருவரே இருந்தார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் இருக்க வில்லை . அதற்குப் பிறகு தான் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானார்கள் என்று தான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார். இதற்கு வேதத்திலும் சில வாக்கியங்கள் வலுவூட்டுகின்றன –
தோயேந ्ஜீவான் வ்யஸ்ஸர்ஜ பூ₄ம்யாம் – தண்ணீரோடு ஜீவன்களைப் படைத்தார்
ப்ரஜாபதி: ப்ரஜா: அஸ்ருஜத – ப்ரஜாபதி உடலோடு கூடிய ஆத்மாக்களைப் படைத்தார்
யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே – இந்த ஜீவ ராசிகள் எதிலிருந்து உண்டாயினவோ
இந்த வாக்கியங்களில் எல்லாம் ஜீவனோடு கூடின உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன என்று சொல்லப் படுகிறபடியால் ஜீவாத்மாவும் உண்டாக்கத் தான் படுகிறார்.
கேள்வி – ப்ரஹ்மம் நித்தியமானது என்று வேதம் சொல்கிறது. “தத் த்வம் அஸி”. “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான வாக்கியங்கள் ஜீவாத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று சொல்லுகின்றன. ஆகையால் ஜீவாத்மாவும் நித்தியமானவராக தானே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி யெழுப்புகிறார்கள்.
பூர்வ பக்ஷியின் பதில் – அப்படிப் பார்த்தால் “ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம”, ”ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்”-முதலான வாக்கியங்களில் அசேதனப் பொருட்கள் கூட ப்ரஹ்மமே தான். ஜகத்தே ப்ரஹ்மம் தான் என்று சொல்லப் படுகிறபடியால், ப்ரஹ்மம் நித்தியமான படியால் அசேதனப் பொருள்களும் நித்யமானவை என்று ஏற்க வேண்டி வரும். அது எப்படிப் பொருந்தாதோ , அதுவே போல் உங்கள் வாதமும் பொருந்தாது.
எனவே ஆகாசம் முதலானவற்றைப் போல் ஜீவாத்மாக்களுக்கும் உத்பத்தி உண்டு என்று பூர்வ பக்ஷி கூறுகிறார்.
ஸித்தாந்தியின் பதில்
ஸித்தாந்தம் – 1- ந ஆத்மா ச்ருதே : நித்யத்வாத் ச தாப்₄ய:
ஆத்மா ந – ஜீவாத்மாக்கள் (உண்டாக்கப் படுவது) இல்லை
ச்ருதே : – வேதத்திலிருந்து (அவர்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று தெரிகிறபடியால்)
தாப்₄ய: – அந்த வேத வாக்கியங்களிலிருந்தே
நித்யத்வாத் ச – ஆத்மாக்கள் நித்யமானவை என்று அறிகிற படியாலும்
வேதத்தில் தெளிவாகவே ஆத்மாக்களுக்கு உண்டாக்கம் இல்லை என்று சில வாக்கியங்களில் சொல்லபடுகிறது.
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்-அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஜீவாத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ-முழுமையான ஜ்ஞாநம் கொண்ட பரமாத்மா, குறைந்த ஜ்ஞாநம் கொண்ட ஜீவாத்மா ஆகிய இருவருமே அஜர்கள்-அதாவது உண்டாக்கம் இல்லாதவர்கள்
அதே போல் சில வேத வாக்கியங்கள் ஜீவாத்மாக்கள் நித்யமானவர்கள், அதாவது அழிவற்றவர்கள் -எப்போதும் இருக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன –நித்யோ ् நித்யாைநாம் யோ வித₃தா₄தி காமாந்--நித்யமானவரான ஒரு பரமாத்மா நித்யமான எண்ணிறந்த ஜீவாத்மாக்களுக்கு ஆசைப்பட்டதைக் கொடுக்கிறார்-
அஜ: நித்ய: சாச்வத: அயம் புராண:-ஜீவாத்மா பிறப்பில்லாதவர், நித்யமானவர், மாறுபாடுகள் அற்றவர், மிகப் பழமையானவராய் இருந்தாலும் புதுப் பொருள் போல் ஆச்சர்யமூட்டுபவர்
ஆகவே , ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படுவதில்லை என்று வேதத்திலிருந்து தெரிகிறது என்கிறார் வேத வ்யாஸர்.
ஸித்தாந்தியின் பதில் -இதற்கு மேல் பூர்வ பக்ஷி சொன்ன யுக்திகளுக்கு பதில் கூற வேண்டும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை என்றால் “ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று உத்தாலகர் கூறியது எப்படிப் பொருந்தும்?
பதில் – ஜீவாத்மாக்கள் உண்டாக்கப் படாவிட்டாலும் ப்ரஹ்மத்தினுடைய கார்யங்கள் தான் என்று ஏற்கப்படுகிறது. மண்ணை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாவது போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகும்.
கேள்வி – ஜீவாத்மாக்கள் கார்யம் தான், ஆனால் உண்டாவதில்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதில் – ’கார்யம்’ என்றால் ’வேறொரு நிலையை -மாறுபாட்டை அடைந்திருக்கும் பொருள்’—அவஸ்தாந்தர ஆபபத்தி-. அந்த வேறொரு நிலை மாறுபாடு (Transformation) என்பது இரண்டு வகைப்படும்
1-ஸ்வரூப விகாரம் – உருவ மாறுபாடு – இது தான் ஒரு பொருளின் உண்டாக்கம் என்று சொல்லப்படுகிறது.
2-ஸ்வபா₄ப விகாரம் – தன்மையில் மாறுபாடு – இது ஏற்படும் போது உண்டாக்கம் என்று சொல்வதில்லை .-அசேதனப் பொருள்களுக்கு மட்டும் தான் ஸ்வரூப விகாரம் (உருவ மாறுபாடு) என்பது உண்டு. ஒரே தங்கம் காசாகவும், மோதிரமாகவும், தோடாகவும், சங்கிலியாகவும் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. அப்போது மோதிரம் உண்டாகிறது, சங்கிலி உண்டாகிறது என்று சொல்கிறோம்.
சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ஸ்ருஷ்டியின் போது உருவ மாறுபாடுகள் கிடையாது, ஆனால் தன்மைகளில் மாறுபாடுகள் உண்டு -– ஒரு ஸமயம் அறிவு குறைந்திருக்கும், ஒரு ஸமயம் மலர்ந்திருக்கும். இதற்கு ஸ்வபாவ விகாரம் என்று பெயர். இது ஏற்படும் போது அந்தப் பொருள் உண்டாகிறது என்று சொல்வது கிடையாது.
ஆக, அசேதனங்கள் சேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்தால் மாறுபாடுகளை அடைகிறபடியால் ப்ரஹ்மத்தின் கார்யங்கள் தான், ஆனால் ஜீவாத்மா உண்டாகிறார் என்று கூற முடியாது என்று வ்யாஸர் கூறுகிறார்.-ஜீவாத்மாவைப் பற்றி பிறப்பு மரணம் முதலான சொல்லாலெல்லாம் ஓர் உடலை எடுத்துக் கொள்வதையும் அதை விடுவதையும் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஜீவாத்மா உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்பதே உண்மை .
(சம பரதேவ ஏகி பவதி-நாம ரூப விபாகம் இல்லாமல் ஒன்றாகவே ப்ரஹ்மம் இருந்தது என்று சொல்லிற்று தவிர சேதன அசேதன பொருள்கள் இல்லை என்றதல்ல –தத்வ த்ரயங்களும் நித்யமானவையே தான்)
—
2-3-4-ஜ்ஞாதி₄கரணம்-ஜீவாத்மாவைப் பற்றின ஆராய்ச்சி-
முதல் பூர்வ பக்ஷம் -ஜ்ஞாதி₄கரணம் –ஸங்கதி – இந்தப் பாதத்தின் முதல் மூன்று அதிகரணங்களால் உலகிலுள்ள அனைத்துமே ப்ரஹ்மத்தால் தான் படைக்கப் படுகிறது என்று நிரூபித்தார் வ்யாஸர். அதில் மூன்றாவது அதிகரணத்தில் ஜீவாத்மாவைப் பற்றிய பேச்சு வந்தபடியால், இனி அடுத்த நான்கு அதிகரணங்களால் ஜீவாத்மாவினுணடய ஸ்வரூபம் எப்படிப்பட்டது என்று ஆராய்கிறார்.
இந்த விவாதத்தில் மூன்று பக்ஷங்கள் இருக்கின்றன–2 பூர்வ பக்ஷங்கள், 1 வேதாந்தம் சொல்லும் ஸித்தாந்தம்.
1-பௌத்தர்கள், ஸாங்க்யர்கள் முதலானவர்களின் பக்ஷம் – ஜீவாத்மா ஜ்ஞாநம் மட்டுமே
இந்த மதங்களில் ஆத்மாவை ’சிந் மாத்ரம்’ -’ஜ்ஞாந மயம்’ என்று கூறுவார்கள். இதற்கு “ஜ்ஞாநம் மட்டுமே ஆத்மா ”என்று பொருள். அதாவது, ஒரு குடம் மண்ணால் ஆனது, ஒரு மோதிரம் தங்கத்தால் ஆனது, அது போல் ஜீவாத்மா ஜ்ஞாநத்தாலேயே ஆனவர் என்று பொருள். “மாத்ரம்” சொல்லால் “ஜ்ஞாநம் மட்டுமே ” என்று சொல்வதால் ஆத்மா ஜ்ஞாநமுடையவர் (ஜ்ஞாதா) அல்ல, அதாவது அறிவாளி அல்ல, அறிவே தான் ஜீவாத்மா.
இதற்கு இவர்கள் சில வேத வாக்யங்களைச் சான்றாகக் காட்டுகிறார்கள் –
1–சுக்ல யஜுர் வேதத்தில் இரண்டு சாகைகள் (கிளைகள்) உள்ளன. ஒன்று மாத்யந்தின சாகை , மற்றொன்று காண்வ சாகை -இரண்டிலுமே அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற உபநிஷத் பகுதி உள்ளது. இப் பகுதியில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் புலன்கள் ஆத்மாக்கள் முதலான உலகிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே என்று கூறப்படுகிறது. அச் சமயத்தில், மாத்யந்தின சாகையில் (ய: ஆத்மநி திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஆத்மாவில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. அதே இடத்தில் காண்வ சாகையில் (யோ விஜ்ஞாநே திஷ்ட₂ன்) அதாவது ’யாரொருவர் ஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ ’ என்று கூறப்படுகிறது. ஆகவே ,ஆத்மா என்பவரைத் தான் ஜ்ஞாநம் என்று வேதம் கூறுவதை நாம் உணரலாம். எனவே ஜ்ஞாநமே ஆத்மா .
2-தைத்திரூய உபநிஷத்தில் ஓரிடத்தில் (விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ) அதாவது “அறிவு யாகம் செய்கிறது” என்றுள்ளது. ஆத்மா தானே யாகம் செய்ய முடியும். அதனால் ஆத்மா தான் இங்கு அறிவு எனப்படுகிறார்
இரண்டாவது பூர்வபக்ஷம்–வைஸேஷிகம்- ந்யாய மதம் முதலானவற்றின் பக்ஷம் – ஜடமான ஆத்மாவுக்கு அறிவு செயற்கையான பண்பு-இவர்கள் முன் சொன்ன பக்ஷத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார்கள். ஆத்மா ஜ்ஞாநமே வடிவானவர் என்று முன் பக்ஷத்தில் சொல்லப்பட்டதை இவர்கள் ஏற்கவில்லை-ஆத்மா குடம் மேஜை புத்தகம் போன்ற ஒரு பொருள் தான்,அதாவது ஜடமான பொருள் தான், ஜ்ஞாந வடிவானவர் அல்ல என்கிறார்கள்.
இந்த ஸந்தர்பத்தில் ஜ்ஞாநம் என்றால் என்ன என்று பார்ப்போம். ஜ்ஞாநம் என்ற பொருளுக்கு இலக்கணமே-’ஸ்வயம் ப்ரகாஸத்வம்’ அதாவது ’தானாகத் தோற்றுவது – அறியப்படுவது’ என்ற பண்பு தான். உலகத்தில் குடம் மேஜை முதலான பொருள்கள் அறியப் படுவதற்கு அவை மட்டும் இருந்தால் போதாது, வெளிச்சம் வேண்டும், கண் வேண்டும், நமக்கு அறிவு வேண்டும்; இப்படி மற்ற பொருள்களின் உதவியால் அறியப்படும் பொருள்களை ஜடம் என்பார்கள். இவை அஸ்வயம் ப்ரகாஸம் -அதாவது தானாகத் தோற்றாத பொருள்கள்-ஆனால் ஜ்ஞாநம் என்பது அப்படி யல்ல, தான் இருந்தாலே தானாகத் தோற்றிவிடும், ஜ்ஞாநத்தை அறிவதற்கு வேறொரு ஜ்ஞாநம் கூடத் தேவை யில்லை – தானே அறியப் படுகிறது. எனவே அதை அஜடம் என்றும்–ஸ்வயம் ப்ரகாஸம் என்று கூறுவார்கள். ந்யாய மதத்தவர்கள் சொல்வது ஆத்மா குடம் முதலானவற்றைப் போல் ஜடமான பொருள் தான் என்று.
அதே போல், முதல் பக்ஷத்தில் ஏற்கப்படாத ஒன்றை இவர்கள் ஏற்கிறார்கள் – ஆத்மா அறிவாளி (ஜ்ஞாதா) தான், அவருக்கு அறிவு (ஜ்ஞாநம்) என்ற பண்பு உள்ளது, ஆனால் அது இயற்கை யானதோ நிரந்தரமானதோ அல்ல, அவ்வப்போது செயற்கையாக வரக் கூடியது என்கிறார்கள். மோக்ஷம் அடையும் பொழுது ஜ்ஞாநம் முழுமையாக இல்லாமல் போய்விடும், எனவே ஆத்மா முழுமையாக ஒரு கல்லைப் போல் ஆவதே மோக்ஷம் என்கிறார்கள்.
இதற்கு இவர்கள் கூறும் யுக்திகணளப் பார்ப்போம் –முதலில், ஜீவாத்மா உலகெங்கும் வ்யாபித்து அதாவது நீக்கமற நிறைந்திருக்கிறார் என்று ஏற்க வேண்டும். ஏனென்றால்,ஒரு ஜீவாத்மா பயன்படுத்தப் போகும் பொருள்கள் உலகில் வெவ்வேறு இடங்களில் உண்டாகின்றன. அவற்றின்
உண்டாக்கத்துக்கு அந்த ஜீவாத்மாவின் பாபமும் புண்யமும் காரணம் என்று கண்டிப்பாக ஏற்க வேண்டும். ஆனால் பாப புண்யங்களை உடைய ஆத்மா ஓரிடத்தில் இருந்தால், வேறிடத்தில் உண்டாகும் பொருளுக்கு எப்படி காரணமாக முடியும்? எனவே ஆத்மா எங்கும் வ்யாபித்து இருக்கிறார் என்று ஏற்க வேண்டும்.
இப்படி வ்யாபித்திருக்கும் ஆத்மாவை ’ஜ்ஞாநமே வடிவானவர்’ என்று சொன்னாலோ ’இயற்கை யாகவே ஜ்ஞாநம் என்ற நிரந்தரமான பண்பை உடையவர்’ என்று சொன்னாலே கீழ்க் கண்ட குற்றங்கள் ஏற்படும் –
1-உலகெங்கும் இருக்கும் பொருள்களை எல்லாம் நாம் எப்போதும் அறிய முடிய வேண்டும். அப்படி ஏற்பட வில்லை
2-பொருள்களை அறிவதற்கு புலன்களின் தேவையே இல்லாமல் போய் விடும்.
3-ஆழ்ந்த உறக்கத்திலும் கூட ஆத்மாவுக்கு அறிவு ஏற்படவேண்டும், ஆனால் அப்படி நாம் கண்டதில்லை .
தங்கள் பக்ஷத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டும் வேத வாக்யங்கள் –
1-நாஹ க₂ல்வயம் ஸம்ப்ரதி ஆத்மானம் ஜானாதி-அயம் அஹம் அஸ்மி இதி, நோ ஏவ இமாநி பூதாநி–என்ற வாக்கியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது இந்த ஜீவாத்மா தன்னையும் அறிவதில்லை , மற்றப் பொருள்களையும் அறிவதில்லை என்று கூறப் படுகிற படியால் உறக்கத்தில் ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.
(ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞா அஸ்தி) என்ற வாக்கியத்தில் ’முக்திக்குப் பின் ஜ்ஞாநம் இல்லை ’ என்று சொல்லப்படுவதால், முக்தியில் ஆத்மா கல்லைப் போல் தான் இருக்கிறார். எனவே ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையான நிரந்தரமான பண்பல்ல, செயற்கையாக அவ்வப்போது வரக்கூடியது மட்டுமே என்கிறார்கள்.
வேதாந்தம் கூறும் ஸித்தாந்தம்
இந்த இரண்டு பூர்வ பக்ஷங்களையும் தகர்த்து, வேதாந்தம் கூறும் ஆத்மாவின் உண்மையான தன்மையை வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தில் காட்டுகிறார். முதலில் ஸித்தாந்தம் என்ன என்று பார்ப்போம், பிறகு ஸூத்ரங்களின் பொருளைப் பார்க்கலாம்.(இதில் 14 ஸூத்ரங்கள் உள்ளன )
உபநிஷத்துக்கள் கூறும் பக்ஷம் – ஜ்ஞாநமே வடிவான ஆத்மாவுக்கு ஜ்ஞாநம் என்ற இயற்கையான பண்பும் உள்ளது-உபநிஷத்துக்களை ஆராய்ந்தால், முன் சொன்ன இரண்டு பக்ஷங்களிலிருந்து வேறுபட்ட ஒரு பக்ஷம் சொல்லப்படுகிறது.-முதல் பக்ஷத்தில் சொன்னது போல் ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர் என்பதை நாமும் ஏற்கிறோம். எனவே ந்யாய மதத்தவர்கள் சொல்வது போல் ஆத்மா குடம் போல் ஜடமானவர் அல்ல, ஸ்வயம் ப்ரகாஸமான ஒரு பொருள் தான் என்றுnஆகிறது. ஆனால் முதல் பக்ஷத்தில் ஆத்மா அறிவாளி அல்ல, ஆத்மாவுக்கு அறிவு என்ற பண்பு கிடையாது என்றார்கள்,
அதை நாம் ஏற்க வில்லை . ஆத்மா ஜ்ஞானமே வடிவானவர், அதோடு கூட அவருக்கு ஜ்ஞாநம் என்ற பண்பும் உள்ளது என்று கூறுகிறோம். ஜ்ஞாந வடிவான ஆத்மாவுக்கு த₄ர்மி ஜ்ஞாநம் அதாவது பண்பாளனான ஜ்ஞாநம் என்று பெயர். ஆத்மாவிடம் இருக்கும் ஜ்ஞாநத்துக்கு த₄ர்ம ஜ்ஞாநம் – த₄ர்மபூ₄த ஜ்ஞாநம் – பண்பான ஜ்ஞாநம் என்று பெயர்.
ஒரு விளக்கு எரியும் பொழுது அதில் ஜ்வாலை என்ற ஒரு பொருள் உள்ளது. அது நெருப்பே வடிவானது. ஆனால் அது ஓரிடத்தில் மட்டும் தான் இருக்கும். அதற்கு மேல், அந்த ஜ்வாலையில் பண்பாக, அந்த ஜ்வாலையையே அண்டி இருக்கும் ’ஒளி’ – ’ப்ரபா₄’ என்ற ஒரு பொருள் உள்ளது. அது பல இடங்களுக்குப் பரவுகிறது. அதுவும் நெருப்பால் ஆனது தான். எப்படி தேஜஸ்ஸால் (நெருப்பால் ) ஆக்கப்பட்ட ஜ்வாலைக்கு நெருப்பால் ஆக்கப்பட்ட ஒளி என்பது பண்பாக இருக்கிறதோ , அதே போல் ஜ்ஞாநமே வடிவான ஜீவாத்மாவுக்கும் பண்பாக வேறொரு ஜ்ஞாநம் இருக்கிறது.
ஜீவாத்மா ’நான்’, ’நான்’ என்று தோற்றுவதெல்லாம் த₄ர்மி ஜ்ஞாநத்தின் தோற்றம். தன்னைத் தவிர்ந்த மற்ற பொருள்களை யெல்லாம் அறிவது தன்னுடைய த₄ர்ம ஜ்ஞாநத்தைக் கொண்டு தான். இந்த ஜ்ஞாநம் என்பது ஆத்மாவுக்கு இயற்கையானது, என்று ஆத்மாவோடு நிரந்தரமாக இருப்பது, உறக்கத்திலும் சரி மோக்ஷத்திலும் சரி இது ஒரு நாளும் ஆத்மாவை விட்டுச் செல்லாது, மோக்ஷத்தில் ஜ்ஞாநம் முழுமையாக மலர்கிறது என்பதே வேதாந்தத்தின் ஸித்தாந்தம்
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-